காலத்துக்கு ஏற்றவாறு ரயில்களில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்த ரயில்வே துறை முன்வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இயங்கும் முக்கிய ரயில்களில் பழைய ரயில் பெட்டிகளுக்கு பதிலாக சொகுசு வசதி கொண்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் புதிய வகை ரயில் பெட்டிகள் முழுவதும் துருப்பிடிக்காத ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் வடிவமைக்கப்பட்டு விரைவில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர்.