உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம் யொட்டி ஏராளமான பக்தர்கள் திருவாரூரில் குவிந்துள்ளனர். ஆழித்தேரோட்டம் தொடங்கியதும், லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து பக்தி கோஷத்துடன் விண்ணதிர தேரை இழுத்தனர். ஆழித் தேர் 4 வீதிகளிலும் அசைந்து வரும் அழகை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்துள்ளனர்.