தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் கட்டடம்

மவுலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு, வெடிமருந்து மூலம் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டது. கட்டிடத்தை தரைமட்டமாக்குவதற்காக சுமார் 70 கிலோ அளவுக்கு வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. கீழ்தளம், தரை தளம், 5வது தளம் ஆகியவற்றில் வெடிபொருட்கள் நிரப்பட்டு ரிமோட் மூலமாக வெடிக்க வைக்கப்பட்டது. தமிழகத்தில் மிகப்பெரிய கட்டிட தகர்ப்பு இதுவாகும். கட்டடம் தகர்க்கப்படுவதைப் பார்க்க சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கட்டடங்களில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். கட்டிட தகர்ப்பு பணி காரணமாக மவுலி வாக்கம் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டதால் மவுலிவாக்கம் பகுதியில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகர்க்கப்பட்டது மவுலிவாக்கம் கட்டடம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com