பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக நாடு முழுவதிலும் வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிந்தது. அதன்படி இன்று முதல் தில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் குவிந்து வந்தனர். பெரும்பாலான மக்கள் தங்களிடம் உள்ள ரூ.500 மற்றும் 1000 நோட்டுக்களை அதற்குரிய படிவங்களை நிரப்பி ஆதார் எண், பான் எண், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள சான்று படிவங்களை நிரப்பி புதிய நோட்டுக்களை பெற்றுக் கொண்டனர்.