சென்னை கிண்டியில் செல்லம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சித்ரா, ஆஷா ஸ்ருதி, காயத்ரி ஆகிய 3 பேரும் தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியான மாணவிகள் சித்ரா, ஆஷா ஸ்ருதி இருவரும் பி.காம் 3-ஆம் ஆண்டும், காயத்ரி பி.காம் 2-ஆம் ஆண்டும் படித்து வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்த மீனா, ஜெயஸ்ரீ ஆகியோர் இருவரும் பி.எஸ்சி., கணிதம் படித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மாணவிகளின் புத்தகங்களும், தண்ணீர் பாட்டில், ரத்தம் படிந்த காலணிகள், கைக்குட்டைகள் ஆகியவை சிதறிக் கிடந்தன.