தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு

சென்னை கிண்டியில் செல்லம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் சித்ரா, ஆஷா ஸ்ருதி, காயத்ரி ஆகிய 3 பேரும் தண்ணீர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலியான மாணவிகள் சித்ரா, ஆஷா ஸ்ருதி இருவரும் பி.காம் 3-ஆம் ஆண்டும், காயத்ரி பி.காம் 2-ஆம் ஆண்டும் படித்து வருகின்றனர். மேலும் படுகாயம் அடைந்த மீனா, ஜெயஸ்ரீ ஆகியோர் இருவரும் பி.எஸ்சி., கணிதம் படித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மாணவிகளின் புத்தகங்களும், தண்ணீர் பாட்டில், ரத்தம் படிந்த காலணிகள், கைக்குட்டைகள் ஆகியவை சிதறிக் கிடந்தன.
தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் உயிரிழப்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com