கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியான தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட பல அரசியல் கட்சிகளும், விவசாயிகள், வணிகர்கள், லாரி உரிமையாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பால் முகவர்கள், ஆட்டோக்கள், ஆம்னி பேருந்துகள் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டு அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று நிறைவடைந்தது.