அலர்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய உலக முதலுதவி தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மனித பொம்மைகளுடன் நடத்தப்பட்ட பயிற்சியில் பலர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அலர்ட் அமைப்பு சார்பில் இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.