காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது பூரண குணமடைந்துள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இதனிடையில் சென்னை - அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதையடுத்து தமிழக அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் மருத்துவமனை முன்பு குவிந்ததால் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.