சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, இந்திரா பானர்ஜி பதவியேற்றார். அவருக்கு தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் மூத்த நீதிபதிகளும் கலந்துகொண்டனர்.