தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் கத்திபாரா மேம்பாலத்துக்கு இரும்பு சங்கிலியால் பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தும், பூட்டை உடைத்தும் போக்குவரத்தை சீர்படுத்தினார்.