சேலத்தில் ஓமலூர் சாலையில் உள்ள பிரபல நகைக்கடை துவக்க விழாவில் நடிகை கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து கடைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவரை காண ரசிகர்கள் குவிந்ததால், போலீஸாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.