ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நாளில், குண்டு மணி தங்கம் வாங்கினாலும் ஆண்டு முழுவதும் இல்லத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி சென்னை உள்பட பல நகரங்களிள் உள்ள நகைக்கடைகளில் இன்று முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. தங்க காயின், கம்மல், வளையல், செயின், கடவுளின் உருவம் பொறித்த தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.