நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசுகையில், நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்றார். தரை மார்க்கமாக, கடல் வழியாக, வான் வழியாகவும், இணையதளம் மூலம் வருகிற எந்தவொரு சவாலையும் சந்திக்கிற தகுதியை இந்தியா பெற்றிருக்கிறது எனவும் காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் சொர்க்க பூமியாக மாற்றப்படும் என்றார். விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.