இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் என்றாலும், சுதந்திர தினம் என்பதால் கொடி இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ராணுவ வீரர்களின் கம்பீரமான வீரநடையுடனும், முழு மரியாதையுடனும் தேசிய கொடி இறக்கப்பட்டது. கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஏராளமான வந்த பொதுமக்கள் 'பாரத் மாதா கீ ஜே' என உற்சாகத்துடன் வீர முழக்கமிட்டனர்.