ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழையால் 1500க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன, வீடுகளும் சேதமடைந்தது. கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கடைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. பல்வேறு பகுதிகளிலும் செல்போன் கோபுரங்கள் சரிந்ததால் மாவட்டம் முழுவதும் செல்போன் சேவையிலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் இருளில் முழ்கியது.