மதுரையில் கடந்த இரு நாள்களாக பெய்துவரும் மழைக்கு பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பெரியார் பேருந்து நிலையம் முதல் குட்ஷெட் தெரு வரை மேலவெளி வீதியில் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி நின்றது.