ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடியும் கடைகள் அடைக்கப்பட்டு காணப்பட்டன. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை அறிவித்தன.