தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பல இடங்களில் இருந்து மெரீனாவில் குவிந்ததால், கடற்கரையே ஸ்தம்பித்தது. தொடர்ந்து 5வது நாளாக மெரினாவில் திரண்டுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் பகல் பொழுதில் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.