சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். இதனிடையே, சிலிண்டர் லீக் ஆகியதால், இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது எனவும், இந்த விபத்தில் கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களும் எரிந்தன. மேலும் அருகில் இருந்த ஏ.டி.எம் ஒன்றிலும் தீ பரவியது.