இளைஞர்களின் எழுச்சி நாயகன், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 2-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தினமணி நாளிதழ் சார்பில், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியில், அப்துல் கலாமின் பொன்மொழிகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய மாணவர்கள் கலாமின் உறுதிமொழிகளை வாசிக்க அதை மாணவ, மாணவியர் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.