கடந்த 7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த போரூர் மேம்பாலப்பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கென தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பச்சைக் கொடி அசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி.