சென்னை மெரினாவில் ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவினர். சிலரை போலீஸார் கைது செய்த நிலையில் 5 மாணவர்கள் மட்டும் கடலில் இறங்கி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராடிய இளைஞர்களை போலீஸார் பிறகு கைது செய்தனர்.