பிஎஸ்-3 வாகனங்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனை மற்றும் வாகனப் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை செய்து உள்ள நிலையில், பைக்குகளுக்கும் ஸ்கூட்டர்களுக்கும் வரலாறு காணாத அளவில் விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அலைமோதியது மக்கள் கூட்டம். ஆனால் தள்ளுபடி விலையில் BS3 பைக்குகளை வாங்கியதாக ஒருவர்கூட தெரியவில்லை. அனைத்து டீலர்கள் ஸ்டாக் இல்லை, எல்லாம் வித்துடுச்சு, என்ற தெரிவித்த வந்த நிலையில், கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் சில ஷோரூம்கள் மூடிவிட்டன.