தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தமும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,700 கோடி நிலுவை தொகையும், மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க ரூ.100 கோடி வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து வேலைநிறுத்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள்.