கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த 2 சிறுமிகளின் உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தனித்தீவாக காட்சியளிக்கும் பி.எஸ்.என்.எல் குடியிருப்புப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து, ஓட்டேரி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்கு நேரில் சென்று, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.