சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பாவனா மற்றும் யுவஸ்ரீ ஆகிய இரு சிறுமிகள் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி மின்வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் 5 ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.