சென்னை கோயம்பேட்டில் காய்கறி வரத்து குறைவால் விலைகள் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் ஒரு சில மாதங்களுக்கு தொடரும் என்றும், வரத்து அதிகரித்தால் தான் விலை குறைய வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். அப்படியிருக்க நடுத்தர மற்றும் எழியோர் வேறு வழியில்லாமல் காய்கறி வாங்கித்தானே ஆகவேண்டும் என்று நொந்தபடி வாங்கிச் செல்கின்றனர்.