பெங்களூருவில் கொட்டி தீர்த்த கன மழையால், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. நகரின் முக்கியப் பகுதியான எலக்ட்ரானிக் சிட்டி முதல் சில்க் போர்டு வரையிலான சாலையில் பெருமளவு மழை நீர் பெருக்கெடுத்தது ஓடியது. எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு சாய்ந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.