தொடர்ந்து 4ஆவது ஆண்டாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குரேஸ் எல்லைப் பகுதியில் ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். வீரர்களுக்கு இனிப்பை ஊட்டிவிட்ட மோடி, அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார். மோடியுடன் ராணுவ தலைமைத் தளபதி பி.எஸ். ராவத் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகளும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.