அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றுகின்றது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மக்கள் தங்களது கோபங்களையும் குமுறல்களையும் வீதிகளில் வந்து அனிதாவின் பதாகைகளுடன் வெளிப்படுத்தினர். மாணவி அனிதாவின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதால், ஏராளமான பொதுமக்கள் திரண்டு அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.