லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், அவரது இல்லத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கௌரி லங்கேஷின் மரணத்துக்கு தனது இரங்கல்களை தெரிவித்துள்ள கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அவர் கொலை செய்யப்பட்டது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.