நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் மற்றும் போலீஸார் சமாதானம் செய்த பிறகு மாணவிகள் அமைதியாக கலைந்து சென்றனர். நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகளின் போராட்டத்திற்கு பெற்றோர்களும், பொதுமக்களும் ஆதரவு அளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.