சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, ரூ. 20 ஆயிரம் கோடி முதலீட்டில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு, மெட்ரோ ரயில் போக்குவரத்து பணிகள் ராட்சத டனல் போரிங் இயந்திரம் முலம் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் சுரங்கப் பணி இடையே நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளில் 2.2 கி.மீ. தூரத்துக்கான சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்தது, விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.