காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரையுலகம் நடத்திய மௌன அறவழிப் போராட்டத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைத்துறையினரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், சத்யராஜ், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், பிரசாந்த், விஷால், தனுஷ், விஜய்சேதுபதி, இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தாணு, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிசிவகுமார் என பலர் கலந்து கொண்டனர்.