அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை மக்களிடம் நிலவி உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், புரசைவாக்கம், வேளச்சேரி, குரோம்பேட்டை பகுதிகளில் நகைக்கடைகளில் பொதுமக்கள் அதிகாலை முதல் தங்கம் வாங்கி குவித்து வந்தனர்.