கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 15 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடும் கனமழை பெய்து வருவதால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.