மதுரையில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து கிழக்கு நுழைவு வாயிலில் இருந்து ஆயிரங்கால் மண்டபம் வரை இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலாயின. பற்றி எரிந்த தீயின் வெப்பம் தாங்காமல் மாடங்களில் இருந்த புறாக்கள் மடிந்து விழுந்தன. மேலும் கிழக்கு கோபுர வாசலின் சுவற்றின் காரைகள் பெயர்ந்து விழுந்தன. தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிகள் விரைவில் புனரமைக்கப்படும் என்றார் ஆட்சியர் வீரராகவராவ். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.