தமிழகத்தில் ‘ஏர்செல்’ செல்போன் சேவை முடங்கியதால் அந்நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருப்பூர், திருச்சி, கரூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் சேவை முடங்கியதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.