முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 66 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், சத்துணவு மையங்கள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நடமாடும் குழுக்கள், சுங்கச் சாவடி, பேருந்து, ரயில், விமான நிலையங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதன் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி வழங்கப்படும்.