சென்னை, பல்லாவரம் வேல்ஸ் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற உலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் ஏழை, எளிய மக்கள் மீது என்றும் மாறாத அன்பும், பரிவும் மிக்க மனிதாபிமானமிக்க மனிதராகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வாழ்ந்து கொண்டிருப்பார் என்றார். மாநாட்டில் எம்.ஜி.ஆர். அண்ணன் மகள் லீலாவதிக்கு விருது வழங்கி கெளரவிக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் ஏ.சி.சண்முகம், சைதை துரைசாமி, ஐசரி கணேஷ், நடிகை லதா.