திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் வாகனச் சோதனையின்போது காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்தில் கர்ப்பிணி பலியான சம்பவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை போர்க்களமாக மாறியது. இரவு தொடங்கிய போராட்டம் போலீஸாரின் தடியடியைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. போராட்டத்தால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள், காவல்துறை, வருவாய்த்துறை வாகனங்கள் கல்வீச்சு தாக்குதலால் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.