தேனி அருகே குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய சென்னை, திருப்பூர், ஈரோடு மாணவிகள் 15 பேர் மீட்கப்பட்டு மீட்கப்பட்ட போடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவ - மாணவிகளை மீட்டும் முயற்சியில் தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினர்.