சென்னை எழும்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகை விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்தும், தீபாவளி விற்பனையைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். அனைத்து விற்பனை நிலையங்களிலும் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் அரசு தள்ளுபடி வழங்குகிறது. இதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி, நெசவாளர்களுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்றார் அமைச்சர்.