கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட் வழங்கியது. இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பதட்டமான நிலையால் பம்பை, சபரிமலை, நிலக்கல், இளவங்கல் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூகு தெரிவித்துள்ளார்.