இங்கிலாந்தை சேர்ந்த நோவா எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் ஒன் ஃபோர் என்ற இரண்டு செயற்கைக் கோள்களை இந்தியா வர்த்தக நோக்கில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-42 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.