அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா சென்னை மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்திற்கு வந்த அவர் முதலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் நினைவிடத்தை வலம் வந்து வணங்கினார். அவருடன் முதல்வர் ஓ. பன்னனீர்செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.