இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் டி.டி.வி.தினகரன் ரூ.60 கோடி வரை பேரம் பேசி லஞ்சம் கொடுத்ததாக கூறி தில்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக தில்லி போலீஸார் முன்பு நேரடியாக ஆஜராக வேண்டும் என்று தில்லி குற்றப்பிரிவு போலீஸார் சென்னை வந்து நேரடியாக தினகரனிடம் சம்மன் அளித்தனர். இதனை அடுத்து தில்லியில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தினகரன் தில்லி சென்றடைந்தார்.