2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் தீவிரவாதிகள், பாதுகாப்பு தடுப்புகளை மீறி வளாகத்திற்குள் புகுந்து சராமரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். தாக்குதல் நடைபெற்று 16ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று, உயிர்ழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.