சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்களிடம் பேசினார். அப்போது கட்டுப்பாடும், ஒழுக்கமும் தான் வாழ்க்கையில் மிக முக்கியம். அதனை எப்போது தவற விடாதீர்கள், குடும்பத்தை கவனியுங்கள், குழந்தைகளின் படிப்பில் அக்கறை செலுத்துங்கள் அதுதான் வாழ்க்கையில் முக்கியம், மத்ததெல்லாம் அதுக்கு அப்புறம் என்றார். மேலும் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பர் 31ல் தெரிவிப்பேன் என்றார்.