சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து திமுக செயல்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, சுரேஷ்ராஜன், ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்எல்ஏக்கள் ஆகியோர் பங்கேற்று அறவழியில் போராட்டம் நடத்தினார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அனைவரையும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.